உலகம் (World)

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இரங்கல்

Published On 2024-10-12 23:51 GMT   |   Update On 2024-10-12 23:51 GMT
  • ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஜெருசலேம்:

பிரபல இந்திய தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாடாவின் இழப்பிற்காக நானும் இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News