உலகம்

கென்யாவில் சோகம்: பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

Published On 2024-09-06 09:09 GMT   |   Update On 2024-09-06 09:09 GMT
  • மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
  • இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைரோபி:

கென்யா நாட்டில் உள்ள நெய்ரி மாகாணத்தில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர் விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News