உலகம் (World)

இங்கிலாந்து வினாடி வினா: இறுதிப்போட்டிக்கு தேர்வான கொல்கத்தா பட்டதாரி

Published On 2024-04-05 10:40 GMT   |   Update On 2024-04-05 10:40 GMT
  • பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டி நடத்திவருகிறது.
  • வினாடி வினா போட்டியில் கொல்கத்தா பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றிருந்தார்.

லண்டன்:

இங்கிலாந்தின் பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்திவருகிறது. மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்த வினாடி வினா போட்டியின் அரையிறுதிச் சுற்று கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு பங்கேற்றது. அந்தக் குழுவில் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம்பிடித்தார்.

போட்டியில் முன்வைக்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சவுரஜித் தேப்நாத் திறம்பட பதிலளித்தார். இதன்மூலம் அவரது குழு இறுதிச்சுற்றுக்கு தேர்வானது. லண்டனில் வரும் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

Tags:    

Similar News