உலகம் (World)

சீனாவில் பனி மூட்டம்: சாலை விபத்தில் 17 பேர் பலி

Published On 2023-01-08 04:45 GMT   |   Update On 2023-01-08 04:45 GMT
  • பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன.
  • கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியவில்லை.

பீஜிங்:

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி பகுதியில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயம்அடைந்தனர்.

கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேகத்தை குறைத்து கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News