உலகம் (World)

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Published On 2023-03-01 04:28 GMT   |   Update On 2023-03-01 04:28 GMT
  • இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.
  • ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம்.

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது.

இந்த கோர விபத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News