இந்திய பிரதமர் மோடியின் ரஷிய பயணத்தால் அமெரிக்கா ஏமாற்றம் அடைந்தது: அதிகாரி தகவல்
- பிரதமர் மோடி கடந்த 7, 8-ந்தேதிகளில் ரஷியா சென்றிருந்தார்.
- அதே நேரத்தில் நேட்டோ மாநாடு நடைபெற்றது.
இந்திய பிரதமர் மோடி கடந்த 8 மற்றும் 9-ந்தேதி என இரண்டு நாட்கள் பயணமாக ரஷியா சென்றிருந்தார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திய பிறகு மோடியின் முதல் பயணம் இதுவாகும். மோடி பயணம் மேற்கொண்ட நேரத்தில்தான், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நேட்டோ மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.
இந்த நிலையில் நேட்டோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷிய பயணம் மேற்கொண்டது. அதிகரிக்கும் இந்தியா- ரஷியா இடையிலான உறவு அளிக்கிறது என அமெரிக்க பராளுமன்ற எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் டொனால்டு லு பதில் அளித்தார்.
"இந்திய பிரதமர் மோடியின் பயணம் நேரம் பற்றிய கவலைப்பற்றி உங்கள் கருத்துடன் நான் உடன்பட முடியாது. எங்களுடைய இந்திய நண்பர்களுடன் (அதிகாரிகளடன்) இது தொடர்பாக கடினமான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிக்கிறோம்" என டொனால்டு அமெரிக்கா பாராளுமன்ற எம்.பி.க்களிடம் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "இந்தியா பிரதமர் மோடி ரஷியா செல்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின்பேது போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சியை சந்தித்து பேசினார். உக்ரைன் மீதான போர் சண்டையால் போரை வெல்ல முடியாது. உக்ரைன் சண்டையில் குழந்தைகள் உயிரிழந்ததை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். புதின் இருக்கையில் அவர் முன் லைவ் டெலிவிசனில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார் " என்றார்.
ரஷியா பயணத்தின்போது இந்திய பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது குறித்து மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரஷியா- இந்தியா உடன் புதிய முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை. தொழில்நுட்ப ஒத்துழைப்பை பார்க்க முடியவில்லை" என்றார்.
"உக்ரைனில் உள்ள கிய்வ் நகரில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் புடின் வேண்டுமென்றே ஏவுகணைகளை வீசிய அன்றே மாஸ்கோவில் போர்க்குற்றவாளி புட்டினை நான் மிகவும் மதிக்கும் மற்றும் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி கட்டித் தழுவியதைக் கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்" என எம்.பி. ஒருவர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.