உலகம்

பாதுகாப்பு குறைபாடு எதிரொலி: அமெரிக்காவின் ரகசிய பிரிவு தலைவர் விலகல்

Published On 2024-07-23 16:04 GMT   |   Update On 2024-07-23 16:04 GMT
  • துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
  • கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் பிரசாரம் செய்தபோது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் அவரது வலது காதில் தோட்டா உரசிச் சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே, கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

இதற்கிடையே, டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் ரகசிய பிரிவின் கவனக்குறைவே காரணம் என புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று கிம்பர்லி சீட்டல் அமெரிக்காவின் ரகசிய பிரிவு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியானது.

Tags:    

Similar News