search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presidential election"

    • உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர்.
    • உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தது கோல்டன் ரெட்ரீவர் நாய்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். சுமார் 1 மணிநேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசாரமாக விவாதித்தனர். அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து குடியேறுபவர்களின் மீதான வெறுப்பு டிரம்ப்பின் முன்வைக்கும் அரசியலில் பிரதானமானது.

    2017 முதல் 2021 வரை அவர் அதிபராக இருந்தபோது குடியேற்றம் மீதான கடுமையான போக்கை அவர் கடைபிடித்தார். இந்நிலையில் கமலா ஹாரிஸுடன் நடந்த விவாதத்திலும் டிரம்ப்பின் குடியேற்றவாசிகள் மீதான வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. விவாதத்தின்போது பேசிய டிரம்ப், ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்ப்ரிங்பீல்ட் -இல் குடியேற்றவாசிகள், மக்களின் வளர்ப்பு நாய்களை கொன்று சாப்பிடுகின்றனர். [அமெரிக்கா] உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர். இதுதான் தற்போது இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியிருந்தார்.

    ஆனால் டிரம்ப் கூறியதற்கு எந்த விதமான ஆதரங்களும் இல்லை என்றும் இணையத்தில் பரவிய வதந்திகளை டிரம்ப் உண்மை போல பேசி வருவதாகவும் கண்டனங்கள் எழுந்தன. டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசியதையே பேசி வருவதாக கமலா ஹாரிஸும் விவாதத்தின்போது தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் நாய்களை குடியேற்றவாசிகள் கொன்று சாப்பிடுவதாக விவாதத்தில் பேசுவதை தனது உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று அங்கிருந்து எழுந்து சோபவின் பின்னால் ஒளிந்துகொண்டு பயத்தில் வெலவெலத்து நிற்பதை அந்த உரிமையாளர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து  இந்த  வீடியோ இணையத்தில் சுமார் 14 மில்லயன் பார்வைகளையும் தாண்டி வைரலாகி வருகிறது. நாயின் ரியாக்ஷனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் டிரம்பை கலாய்த்து வருகிறனர். இதற்கிடையே குடியேற்றவாசிகள் நாய்களை சாப்பிடுவதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு வெள்ளை மாளிகையும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கருத்துக்கணிப்புகளில் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலை

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஜனநா யக கட்சி சார்பில் தற்போ தைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.

    கிராமப்புறங்கள் அதிகம் உள்ள, மத உணா்வு அதிகம் கொண்ட, நிற சகிப்புத் தன்மை இல்லாத, வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிதான் வெற்றி பெறும்.

    நகா்ப்புறமான, பன்முகத்தன்மையை போற்றுவோா், கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ளன.

    ஆனால் நகரங்கள், கிராமங்கள் இரண்டும் நிறைந்த, இரு வகை மக்களும் வாழும் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜாா்ஜியா, வடக்கு கரோலினா, அரிசோனா, நவாடா போன்ற மாகாணங்கள் எந்த தோ்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இந்த மாகாணங்கள்தான் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவை களாக உள்ளன.

    ப்ளூம்பா்க்-மாா்னிங் கன்சல்ட் கணிப்புகளில், கமலா ஹாரிஸ் ஒரே ஒரு மாகாணத்தில் அதிக முன்னிலையும் நான்கு மாகாணங்களில் 49-லிருந்து 51 சதவீதம் வரையிலான முன்னிலையும் வகிக்கிறாா். இரு மாகாணங்களில் டிரம்ப்புடன் சமன் செய்கிறாா்.

    வால் ஸ்ட்ரீட் ஜா்னல், கினிபியாக், சபோல்க்-யு.எஸ்.ஏ. டுடே போன்றவற்றின் கருத்துக்கணிப்புகளிலும் 48 முதல் 49 சதவீத ஆதரவுடன் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறாா். 43 முதல் 48 சதவீத ஆதரவுடன் டிரம்ப் சற்று பின்தங்கி உள்ளாா்.

    அமெரிக்க தோ்தலில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாகாண மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுக்கள் தான் அதிபரைத் தோ்ந்தெடுக்கும். மொத்தமுள்ள 538 தோ்வுக் குழுக்களில் 270 குழுக்களின் ஆதரவைப் பெறுபவா்தான் வெற்றி பெறுவாா்.

    அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அது தோ்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும். தற்போதைய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்தாலும், போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

    இவ்வாறு அவா்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
    • தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. இதன் காரணமாக அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    அதன்படி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இலங்கை அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    அந்த வகையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இந்த நேரத்தில் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்.

    இதேபோல் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். 

    • கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது.
    • கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க தனது ஆதரவை தெரிவித்தார்.

    கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது. அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான பிரதிநிதிகள் ஆதரவு எண்ணிக்கையை பெற்றார்.

    இதன்மூலம் அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட் டர்ஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவை பெற்று உள்ளார். டிரம்புக்கு 42 சதவீத ஆதரவு உள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் டிரம்புக்கு எதிராக அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்று கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டதில் இருவரும் சம நிலையுடன் இருந்தனர்.

    தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகி உள்ள நிலையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

    அதேபோல் டிரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோபைடன் 2 புள்ளி குறைவாக இருந்தார். ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும் போது டிரம்ப் 2 புள்ளிகள் குறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டிரம்புக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய போட்டியாளராக கமலா ஹாரிஸ் உள்ளார்.

    • துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
    • கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் பிரசாரம் செய்தபோது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இதில் அவரது வலது காதில் தோட்டா உரசிச் சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே, கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதற்கிடையே, டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் ரகசிய பிரிவின் கவனக்குறைவே காரணம் என புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று கிம்பர்லி சீட்டல் அமெரிக்காவின் ரகசிய பிரிவு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியானது.

    • ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான்.
    • அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர் சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில்  ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பும் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

    ஆனால் அதிபர் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக பேச்சிலும் செயல்களிலும் தடுமாற்றத்துடன் இருந்து வருவது அவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்தானா என்ற சந்தேகத்தை அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எழச் செய்தது.

    இதற்கிடையில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க செய்துள்ளதாக பார்க்கமுடிகிறது, எனவே பைடன் அதிபராக போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று ஜநாயனாய கட்சியினர் பயந்தனர்.

    இந்த நிலையில்தான் அதிபர் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய- ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அவர் முன்மொழிந்துள்ளார். கமலா ஹாரிஸுக்கு ஜனநாய கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

     

    முன்னதாக ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான். அதை சுட்டிக்காட்டி டிரம்பும் பைடனை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, ஊழல் நிறைந்த தீவிரவாத ஜனநாயகவாதிகள் அவரை தூக்கியெறிந்துள்ளனர். நிலையற்ற ஜோ பைடன் அமரிக்க வரலாற்றிலேயே இது வரை இருந்த மிகவும் மோசமான அதிபர். தெற்கு எல்லை விவகாரத்தில் இருந்து , தேச பாதுகாப்பு, சர்வதேச நிலைப்பாடுவரை நமது நாட்டை அழிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர் செயல்பட்டுள்ளார்.

    பைடனை சுற்றியுள்ளவர்கள் அவரது உடல் மற்றும் மன நிலை, நியாபகமறதி குறித்து அமெரிக்காவிடம் பொய் சொல்லிவந்துள்ளனர். இப்போது [பைடன் விலகியுள்ள நிலையில்] மீதமுள்ளவர்களும் அவரைப் போன்றவரே ஆவர் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் தற்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப், அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர்  சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒருவரின் சிரிப்பை வைத்து நிறைய விஷயங்களை சொல்லிவிட முடியும். She is nuts. அவரை வெல்வது மிகவும் சுலபம் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில் ஜனநாயகக் காட்சியைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து பேசுகையில், சண்டையில் இருந்து பைடன் எப்போதும் பின்வாங்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலை புரிந்துகொண்டு அவர் எடுத்துள்ள இந்த முடிவு அவரது வாழ்வில் எடுத்த மிகவும் கடினமான முடிவாக இருக்கும். அமரிக்காவுக்கு நன்மை பயக்காது என்றால் இந்த முடிவை அவர் எடுத்திருக்க மாட்டார் என எனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார். 

     

    • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
    • கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ந் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதில் தோட்டா உரசி சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    இந்த நிலையில் கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். மிச்சிகன் மாகாணத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, நான் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் கடந்த வாரம் ஜனநாயகத்திற்காக ஒரு குண்டை உடலில் வாங்கினேன் என்றார்.

    • துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார்.
    • குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ப். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டது. தலையை சற்று அசைத்ததால் குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பிய நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். டிரம்புக்கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி  கோரி காம்ப்ரேட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

     

     

    இந்நிலையில்  துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார். குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மாநாட்டில் பேசிய அவர், இன்றுதொட்டு நான்கு மாதத்தில் [அதிபர் தேர்தலில்] நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம். நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

    மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர், 'எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன்.

     

    நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்' என்று தெரிவித்தார்.மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதிகாப்பு வீரருக்கு  டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்து வருகிறது. முன்னதாக   ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள கடவுள் ஜகந்நாதர்தான் டிரம்ப்பின் உயிரைக் காப்பாற்றினார் என்று கோவில் பூசாரி சொன்னது குறிப்பிடத்தக்கது.

    • தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
    • வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது

    அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயக காட்சியை எதிர்த்து குடியரசுக் காட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 2017 தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான டிரம்ப் ]2021 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

     

    அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை டிரம்ப் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால் 2021 இல் வெள்ளை மாளிகை கலவரம் நடந்த அடுத்த நாளே டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டன.

     

    அதனைத்தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது கருத்து சுதந்திரத்தை மதித்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

     

    ஆனால் வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக டொனால்டு டிரம்பின் எக்ஸ் [டிவிட்டர்] மற்றும் யூடியூப் கணக்குகள் மீதும் தடை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து அதை மறைக்க பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
    • அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு உதவுவேன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் குதித்துள்ளார்.

    இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதால் அதிபர் தேர்தல் களம் சூடாகி இருக்கிறது.

    டிரம்ப் பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கியவர். இவரது முதல் மனைவி இவானா. இருவருக்கும் கடந்த 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மார்லா மேப்பிள்ஸ் என்ற பெண்ணுடன் டிரம்புக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்களது இந்த உறவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 1993-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 1997-ம் ஆண்டு இந்த திருமண உறவு முறிந்தது. இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் மார்லா மேப்பிள்ஸ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இதற்கிடையில் தனது முன்னாள் கணவரான டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

     இது தொடர்பாக அவர் கூறும்போது, `எனது மகளின் தந்தையை நான் நன்கு அறிவேன். அவர் (டிரம்ப்) எந்த குற்றத்தையும் செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் நிரபராதி. அவருக்கு எதிராக பல சட்ட சிக்கல்கள் இருந்தாலும் நாங்கள் அவருக்கு ஆதரவாக தான் இருக்கிறோம்.

    அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு உதவுவேன். நான் எந்த வழியில் சேவை செய்ய முடியுமோ அதற்காக தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு மார்லா மேப்பிள்ஸ் தெரிவித்துள்ளார்.

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோபை டன் (வயது 81), குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் டிரம்ப்பை துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். லாஸ்வேகாசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலாஹாரிஸ் பேசியதாவது:-

    டிரம்பின் ஆலோசகர்கள் 900 பக்க வரைபடத்தை உருவாக்கி, "திட்டம் 2025" என்று அழைக்கிறார்கள். இது சமூகப் பாதுகாப்பைக் குறைக்கும் திட்டம். இதில் கருத்தடைக்கான அணுக்களை கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இனப்பெருக்க சுதந்திரத்தின் மீதான டிரம்பின் முழு தாக்குதலாக இருக்கும்.

    டிரம்ப்புக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கருக்கலைப்பை தடை செய்யும் தேசிய கருக்கலைப்பு தடையில் கையெழுத்திடுவார். ஆனால் நாங்கள் அதை நடக்க அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால், பெண்களை நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு அவர்களின் சொந்த நலனில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. டிரம்ப் நமது ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார். அவர் அமெரிக்க ஜனநாயகத்தை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார். எனது தாய் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். அவரது வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருந்தன.

    அவை தனது இரண்டு மகள்களை வளர்ப்பது மற்றும் மார்பக புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை ஆகும். எனது தாய் அவரது கனவுகளைத் தொடர யாரிடமும் அனுமதி கேட்கவில்லை.

    இது நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதை எப்போதும் அறிந்திருக்கிறோம். சில நாட்களாக அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவது என்பது எளிதானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது. ஆனால் அதிபர் ஜோபைடனைப் பற்றி நாம் அறிந்த ஒன்று என்னவென்றால் அவர் ஒரு போராளி. இவ்வாறு அவர் கூறினார்.

    • எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    பதிவானவற்றில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்தக் காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள்  சுகாதார அமைச்சர் [2001-2005] மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். 38.6 சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி இரண்டாம் இடத்தில் இருந்தார்.

     

    ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று [ ஜூலை 5] இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான கிட்டத்தட்ட 30 மில்லியன் வாக்குகளில் [49.8 சதவீதம்], பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

     

    சயீது ஜலிலி 13 மில்லியன் வாக்குகளுடன் பின்தங்கினார். எனவே ஈரான் அரசின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளார். மசூத் பெசெஸ்கியன் தொழிமுறையாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். இவர் ஈரானில் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டும் வரும் பெண்கள் பர்தா அணியும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    ×