உலகம்

ஜூலியன் அசாஞ்சே பலரின் உயிருக்கு வேட்டு வைத்தவர்.. அமெரிக்கா குற்றச்சாட்டு

Published On 2024-06-27 03:43 GMT   |   Update On 2024-06-27 03:43 GMT
  • ஆதரவாளர்கள் அசாஞ்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • அபாயகரமான இடங்களில் பணியாற்றி வருவோர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் அந்நாட்டு அரசுடன் ஏற்பட்ட ஒப்ந்தம் காரணமாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அசாஞ்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜூலியன் அசாஞ்சே சுதந்திரமாக நாடு திரும்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி மேத்யூ மில்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஜூலியன் அசாஞ்சே பற்றி பேசும் போது அவரது நடவடிக்கைகள் எங்களது கூட்டணியை சேர்ந்தவர்கள் குறிப்பாக ஆப்கனிஸ்தான், ஈராக் என அபாயகரமான இடங்களில் பணியாற்றி வருவோரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை உலகம் மறந்துவிட்டது. அவற்றை நினைவுகூறும் போது, விக்கிலீக்ஸ் தான் முதன்முதலில் அமெரிக்க ஆவணங்கள், ரகிசய விவரங்கள் உள்ளிட்டவைகளை பொது வெளியில் கசியவிட்டது. அவற்றை உலகமே பார்க்கட்டும் என்று அவ்வாறு செய்தது. இதன் காரணமாக அரசுடன் நேரடி தொடர்பில் இருந்த ஏராளமான அதிகாரிகள் வெளிச்சத்திற்கு வரும் சூழல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் செய்த சம்பவங்கள் அமெரிக்க தேர்தலில் ரஷிய உளவுத்துறை தலையிட வழிவகுத்தது, என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News