செய்திகள் (Tamil News)

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும்: இமாம் உல் ஹக்

Published On 2019-06-13 12:40 GMT   |   Update On 2019-06-13 12:40 GMT
மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளான இந்தியா போட்டியில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெறக்கூடிய ஆட்டம் என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா மூலம் மூன்று போட்டிகளில் உள்ளது. முக்கிய எதிரியாக நினைக்கும் இந்தியாவை வருகிற ஞாயிற்றுக்கிழமை (16-ந்தேதி) நடக்கிறது. இதில் ஒருவேளை பாகிஸ்தான் தோற்றுவிட்டால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடும்.

ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் என்றாலே மிகப்பெரிய நெருக்கடி இருக்கும். நெருக்கடியான இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளதால், மிகவும் நெருக்கடிக்குள்ளான போட்டியாக கருதப்படும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மிகவும் நெருக்கடிக்குள்ளான ஆட்டம். இந்த போட்டிக்கு பின்னால் ஏராளமான மர்மங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் நாங்கள் எங்களுடைய கிரிக்கெட் பலத்துடன், எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம்’’ என்றார்.

Similar News