செய்திகள் (Tamil News)

இந்தியா சூப்பர் தொடக்கம்: ரோகித் சர்மா 34 பந்தில் அரைசதம்

Published On 2019-06-16 10:34 GMT   |   Update On 2019-06-16 10:34 GMT
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சூப்பர் தொடக்கம் கண்டுள்ள நிலையில், ரோகித் சர்மா 34 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது அமிர் வீசினார். லோகுஷ் ராகுல் 6 பந்திலும் ரன்ஏதும் சேர்க்கவில்லை. இதனால் முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது.

இருவரும் முகமது அமிர் ஓவரை மட்டும் கவனமாக விளையாடினர். மறுமுனையில் ஹசன் அலி, வஹாப் ரியாஸ் பந்து வீச்சை அடித்து விளைாடினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

பவர் பிளே-யான முதல் 10 ஓவரில் இந்தியா 53 ரன்கள் சேர்த்தது. 12-வது ஓவரை சதாப் கான் வீசினார். இந்த ஓவரில் இந்தியா 17 ரன்கள் விளாசியது. ரோகித் சர்மா 4-வது சிக்சருக்கும், ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசினார். அத்துடன் 34 பந்தில் அரைசதம் அடித்தார்.

இந்தியா 16 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் சர்மா 58 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 33 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

Similar News