டி20 உலக கோப்பையில் இந்தியா வெற்றி- புதுவையில் ஆழ்கடலில் தேசிய கொடி ஏந்தி சென்று வீரர்கள் வாழ்த்து
- ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார்.
- இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.
புதுச்சேரி:
புதுவையில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற ஸ்கூபா டைவிங் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ.
ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இந்தியா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் வீரர்கள் சாதனை படைக்கும் போது அதனை தனது குழுவுடன் இணைந்து ஆழ்கடலில் வித்தியாசமான முறையில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
உலக கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.
இதனை கொண்டாடும் வகையிலும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த் தருண்ஸ்ரீ தனது குழுவினருடன் புதுச்சேரி அருகே கடலில் 50 அடி ஆழத்திற்கு சென்று சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியும், இந்திய தேசிய கொடியை ஆழ்கடலுக்குள் எடுத்து சென்று இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடினர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.