டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்

Published On 2024-06-22 15:30 GMT   |   Update On 2024-06-22 15:31 GMT
  • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
  • இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், துனீசியாவின் ஒன்ஸ் ஜபேரு டன் மோதினார்.

இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (11-9) என கைப்பற்றினார். அப்போது ஒன்ஸ் ஜபேர் உடல்நலக் குறைவால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News