டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி

Published On 2024-06-23 12:05 GMT   |   Update On 2024-06-23 12:05 GMT
  • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
  • இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்தித்தார்.

இதில் கோகோ காப் 5-7, 6-7 (7-2) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

இதன்மூலம் ஜெசிக்கா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் பெகுலா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News