டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அல்காரசுடன் மோதுகிறார் ஜோகோவிச்

Published On 2024-07-13 09:11 GMT   |   Update On 2024-07-13 09:11 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் வென்றார்.

லண்டன்

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன.

நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான செர்பிய வீரர் ஜோகோவிச், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (7-2), 6-4 என நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் சந்திக்கிறார்.

Tags:    

Similar News