டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-07-10 09:29 GMT   |   Update On 2024-07-10 09:29 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • இதில் இத்தாலி வீராங்கனை காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

இதில் பவுலினி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் குரோசிய வீராங்கனை வெகிக், ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் மோதுகின்றனர்.

Tags:    

Similar News