டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா

Published On 2024-06-23 13:46 GMT   |   Update On 2024-06-23 13:46 GMT
  • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.
  • இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை காலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை காலின்ஸ்கயா 7-6 (7-0) என கைப்பற்றினார். 2வது செட்டை பெகுலா 6-4 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பெகுலா 7-6 (7-3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இது என்பதும், இந்த ஆண்டில் இது முதல் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News