டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ரிபாகினா, கிரெஜ்சிகோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-07-10 15:07 GMT   |   Update On 2024-07-10 15:07 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • இதில் காலிறுதியில் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

மற்றொரு காலிறுதியில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் கிரெஜ்சிகோவா 6-4, -6-7 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் எலினா ரிபாகினா, பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News