டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரிபாகினா

Published On 2024-06-20 11:38 GMT   |   Update On 2024-06-20 11:38 GMT
  • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
  • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வென்றார்.

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா,

ரஷிய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.

இதில் ரிபாகினா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News