டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரிபாகினாவுக்கு அதிர்ச்சி அளித்த கிரெஜ்சிகோவா

Published On 2024-07-12 09:13 GMT   |   Update On 2024-07-12 09:13 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • இதில் அரையிறுதியில் எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.

இதில் ரிபாகினா முதல் செட்டை 6-3 என வென்றார். சுதாரித்துக் கொண்ட கிரெஜ்சிகோவா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை சந்திக்கிறார்.

Tags:    

Similar News