டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: காயத்தால் காலிறுதியில் விலகிய சபலென்கா

Published On 2024-06-22 11:39 GMT   |   Update On 2024-06-22 11:39 GMT
  • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
  • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா காயத்தால் வெளியேறினார்.

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா உடன் மோதினார்.

முதல் செட்டில் சபலென்கா 1-5 என இருந்தபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சபலென்கா போட்டியில் இருந்து விலகினார்.

இதனால் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News