டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

Published On 2024-07-07 09:44 GMT   |   Update On 2024-07-07 09:44 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.

லண்டன்:

ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் யூலியா புடின்ட்சேவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News