டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

Published On 2024-05-16 01:30 GMT   |   Update On 2024-05-16 01:30 GMT
  • களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
  • இந்தத் தொடரில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ரோம்:

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

இதில் ஸ்வரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் ஸ்வரேவ் மோத உள்ளார்.

Tags:    

Similar News