என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் லாப ஸ்தானத்தை நோக்கி முன்னேறி வருவதால் எதிர்காலம் பற்றிய நல்ல சிந்தனைகள் உண்டாகும்.கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனி போல் விலகும். தொழில் ரீதியான ஏற்றம், அபிவிருத்தி ஏற்பட்டு லாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறும். எதிரிகளால் உண்டாகிய தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வீட்டில் மங்கள ஓசையும், மழலை குரலும் ஒலிக்கப் போகிறது.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாவதுடன் பூர்வீகச் சொத்துக்களும் உங்கள் கைக்கு வந்து சேரும். 12-ம் இட குருவால் மனம் அலை பாய்ந்து வீண் விரயங்கள் ஏற்படலாம். எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட விரயத்தை சுபமாக்க முடியும். சிலருக்கு சிறு சிறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். சிவனுக்கு செந்நிற மலர்கள் சூடி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்