என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மேஷம்
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
முன்னேற்றமான வாரம். ராசிக்கு சனி, சுக்ரன் பார்வை இருப்பதால் மனதில் புது விதமான எண்ணங்கள் தோன்றும். பொருளாதார ரீதியாக உயர்வான நிலையை நோக்கி முன்னேறுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உங்கள் முந்தைய கடனை அடைப்பீர்கள். இதுவரை திருப்ப பெறாத வராக் கடன்கள் வசூலாகும். ஆனால் இதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க நேரும். குடும்ப பொறுப்புகள் கூடும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சினைகள் குறையும்.
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் சீராகும். உங்கள் கடமை உணர்வுக்கும் கடின உழைப்பிற் கும் தகுந்த பலன் கிடைக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும்.காதல் விவகாரம் குடும்பத்தில் எதிர்ப்பை அதிகரிக்கும்.இது மனதில் டென்சனை ஏற்படுத்தும். பொழுது போக்கு விசயங்களில் ஆர்வம் கூடும். எதிர்காலம் பற்றிய கற்பனை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் சீராகி திருமணத்தடை அகலும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்