என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மேஷம்
இந்த வார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் சனியின் பார்வை பெற்று 4, 7, 8-ம் மிடத்தை பார்க்கிறார் தைரிய வீரிய, பராக்ரம ஸ்தானத்தில் புதன் ஆட்சி பலம் பெறுகிறார். பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். சிலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாத சொத்தால் பிரச்சினைகள் கூடும். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித் தன்மை மிளிறும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.வீண் செலவு களை குறைத்து சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும்.வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனாரின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சுமாரான நேரம்.தொழில், வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்.புத்திர பாக்கியம் சித்திக்கும். சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும். உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும். 19.6.2024 பகல் 1.05 மணி முதல் 21.6.2024 மாலை 6.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயலில் தடுமாற்றம், சிந்தனையில் குழப்பம் ஏற்படலாம். பவுர்ணமியன்று முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்