என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னி
ஆனி மாத ராசிபலன்
மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கன்னி ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் புதன், தொழில் ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிப்பது யோகம் தான். இதன் மூலம் 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் செயல்படுவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்பெற்றவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து, பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். தடுமாற்றம் அகலும். தன வரவு திருப்தி தரும்.
சனி வக்ரம்
ஆனி மாதம் 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏராளமாக நடைபெறும். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் விரயங்கள் அதிகரிக்கும். எனவே கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. அதேநேரம் கல்யாணக் கனவுகள் நனவாகும். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். 'வேலை சம்பந்தமாக வெளிநாட்டில் இருந்துவரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்ற சிந்தனை மேலோங்கும். எதிரிகளின் பலம் குறையும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.
கடக - புதன்
ஆனி மாதம் 12-ந் தேதி, கடக ராசியான லாப ஸ்தானத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது யோகமான நேரம் தான். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்பதவி மட்டுமல்ல, சம்பள உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறிகள் உண்டு. கொடுத்த கடன் வசூலாகும்.
கடக - சுக்ரன்
ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். வருமானம் உயரும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். புதிய இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
ரிஷப - செவ்வாய்
ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த செவ்வாய் 9-ம் இடத்தில் குருவுடன் இணைந்து 'குரு மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கலாம். நிலப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தை பொறுத்தவரை உயரதிகாரிகளின் ஆதரவோடு நல்ல மாற்றங்கள் வந்துசேரும். உடல்நலம் சீராகும். சகோதர வர்க்கத்தினரால் நன்மை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்துசேரும். கலைஞர் களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வரலாம். மாணவ-மாணவி களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு தங்கள் பெயரில் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. வருமானம் உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 22, 23, ஜூலை: 3, 4, 8, 9, 12, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப் பச்சை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்