என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னி
இந்தவார ராசிபலன்
12.2.2024 முதல் 18.2.2024 வரை
கலக்கலான வாரம். ராசி அதிபதி புதன் 3, 10ம் அதிபதி சுக்ரன் மற்றும் அஷ்டமாதிபதி செவ்வா யுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை. புத்திசாலித்தனமாக செயல்பட்டு, திட்டமிட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். தொழிலில் சிறு தடைகள் இருந்தாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு விபரீத ராஜயோகதால் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வு தொகை, அதிர்ஷ்டப் பணம் கிடைக்கும். வெளியூர், வெளி நாட்டில் வசிக்கும் சகோதர, சகோதரிகள் ஒன்று கூடி ஆனந்தம் அடையும் சந்தர்ப்பம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சி னை சுமூகமாகும். தொழில், உத்தியோக நிமித்தமாக சிலர் வெளியூரில் வசிக்க நேரும்.
சிலருக்கு மறுமணம் நடக்கும். அஷ்டமாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம், பணம் கொடுக்கல் வாங்கல், வம்பு, வழக்கு, ஜாமீன் போன்றவற்றில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவ ணங்களை கவனமாக கையாளவும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. 14.2 2024 அன்று காலை 10.43 மணி முதல் 16.2.2024 மதியம் 2.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.தேவையற்ற வெளியூர் பயணங்களை ஒத்தி வைக்கவும். தினமும் திருக்கோளாற்று பதிகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்