search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் தனது முதல் மின்சார காரை காட்சிப்படுத்திய  ஸியோமி நிறுவனம்
    X

    இந்தியாவில் தனது முதல் மின்சார காரை காட்சிப்படுத்திய ஸியோமி நிறுவனம்

    • இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
    • வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    ஸியோமி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதித்து 10வது ஆண்டை கொண்டாடுவதன் நினைவாக, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்தது.

    இந்தியாவில் தனது முதல் மின்சார கார் ஆன ஸியோமி SU7 காரை இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இந்த கார் அதிகபட்சமாக 673 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டார்க் திறன் 838 ஆகும்.

    இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரால் மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதுதவிர, வெறும் 2.78 வினாடிகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

    இந்த கார் சிறப்பான பிரேக் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் பிரேக் பிடித்தால் வெறும் 33.3 மீட்டர் தூரத்திலேயே நின்று விடும்.

    இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

    Next Story
    ×