search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி
    X

    தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை ரூபினி விரைவில் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #Roobini
    ரூபினி, 1980-களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி கதாநாயகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    ரஜினியுடன் `மனிதன்’ படம் பண்ணும்போது எனக்குப் 16 வயசுதான். அந்தப் படத்தில் இடம்பெற்ற `காளை காளை..’ பாடல் நல்ல ரீச். அப்போது, ரஜினி மராத்தி மொழியில் என்னிடம், ‘நீ பெரிய டான்ஸர். நான் அப்படியில்லை’னு சொல்வார். ரொம்ப டவுன்ட் டூ எர்த் பெர்சன் ரஜினி. அவருடன் நடிக்கும்போதெல்லாம் எவ்வளவு பெரிய ஆளோட நடிக்கிறோம்ங்கிற வி‌ஷயம் எனக்குத் தெரியாமபோச்சு.

    கமல் சாருடன் `அபூர்வ சகோதர்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கமல் சாரின் தயாரிப்பு. படத்தில் இரண்டு முக்கியக் கேரக்டர்கள். ஒன்று, கவுதமிக்கு மற்றொன்று உங்களுக்கு... இதில் எந்த ரோல் நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறீங்கனு கேட்டாங்க. நான், `அப்பு’ கமலின் காதலி கேரக்டரை செலக்ட் பண்ணேன். ஏன்னா, படத்தில் அப்பு ரோல் ரொம்ப முக்கியம்ல... அதனாலதான்.



    பட ரிலீஸூக்கு முன்னாடி பலபேர், `ஏன் கெளதமி ரோல் பண்ணவில்லை’னு கேட்டாங்க. அப்பு கேரக்டரைப் பார்க்கும்போது ஒரே ஷாக். எப்படிக் கமல் இந்த கேரக்டரைப் பண்ணினார் என்று... அதற்குப் பிறகு கமலுடன் `மைக்கேல் மதன காமராஜன்’ பண்னேன்.

    உங்கள் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம்?

    என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம், `பத்தினி பெண்’. ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி மேடமோட வாழ்க்கை வரலாறு இது. இந்தப் படத்திற்காக `சிறந்த நடிகை’னு மாநில அரசு விருது கொடுத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா கையில் கோல்டு மெடலை வாங்கினேன். அப்புறம் ஒருநாள் ஜெயலலிதா அம்மா அவரோட வீட்டுக்கு என்னை அழைத்தார்.

    என் வீட்டுக்காரர் பிசினஸ்மேன். இப்போ, வாழ்க்கை ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு இருக்கா, பெயர் அனிஷா. 13 வயசு ஆகுது. கல்யாணம் முடிஞ்சு அனிஷா பொறந்ததும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனால், பரதநாட்டியத்தை மட்டும் விட மனசு இல்லை. இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன், கத்துக்கொடுத்துக்கிட்டும் இருக்கேன்.

    `விஜபி 2’ படத்தின் புரமோ‌ஷன் வேலைகளுக்காக தாணு சார், தனுஷ் எல்லோரும் மும்பை வந்திருந்தப்போ அவங்களைச் சந்திச்சேன். ரஜினி சார் மும்பை வந்தாலும், பார்ப்பேன். நல்ல ரோல் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கலாம்னு இருக்கேன். அப்படியாவது சென்னைக்கு வந்துட்டுப் போகலாம்ல... பார்ப்போம், சென்னைக்கு வர்ற நாள் சீக்கிரமே வரலாம். #Roobini

    Next Story
    ×