என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை - இளையராஜா
Byமாலை மலர்30 Dec 2018 6:23 AM GMT (Updated: 30 Dec 2018 6:23 AM GMT)
பொறியியல் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா, புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார். #Ilayaraja
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில், இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இளையராஜாவுக்கு இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆண்டிப்பட்டி பொறியியல் கல்லூரிக்கு இளையராஜா வந்தார்.
கல்லூரி மாணவ-மாணவிகளுடன் இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இசையின் மேன்மை பற்றியும், இசைத்துறையில் தன்னுடைய அனுபவத்தை பற்றியும் மாணவ-மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். அவர் இசையமைத்த சில பாடல்களை மாணவ-மாணவிகள் முன்பாக பாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
‘‘அறிவார்ந்த சிந்தனைகளால் மனிதர்களிடத்தில் வேற்றுமை இல்லை. மனிதனுடைய அனைத்து செயல்களும் இறைவன் அருளாசியுடன்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவன் ஆசியுடன்தான் நான் இந்த அளவுக்கு இசையமைக்கிறேன். என் புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை.
மாணவ-மாணவிகள் தங்கள் சக்தியை முறையாக பயன்படுத்தி, திடமான நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’
இவ்வாறு இளையராஜா பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X