search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோவிலில் சாமி தரிசனம் செய்த அரண்மனை நடிகை
    X

    கோவிலில் சாமி தரிசனம் செய்த அரண்மனை நடிகை

    சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் ராஷி கன்னா.

    சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் ராஷி கன்னா.

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரபல நடிகர், நடிகைகள் அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று நடிகைகள் ராசி கன்னாவும், வாணி கபூரும் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், நடிகை வாணி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, 'ஜெய் மகாகாலேஸ்வரர்' என்று பதிவிட்டுள்ளார்.

    சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை ராசி கன்னா கூறுகையில், ஜெய் ஸ்ரீ மகாகாலேஸ்வரர். மகிழ்ச்சியாக உணர்ந்தேன். உண்மையில், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக உணர்ந்தோம். மகாகாலேஸ்வரர் எங்களை மீண்டும் அழைப்பார் என்று நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×