search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு? - கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்
    X

    துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு? - கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்

    • மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.

    படத்தின் அறிமுக விழா இன்று நடைப்பெற்றது அதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் மற்றும் படக்குழு கலந்துக் கொண்டனர். இந்த விழா கூடிய விரைவில் விஜய் டி.வி தொலைக்காட்சியில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த விழாவில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம் " துப்பாக்கியோட கனம் எப்படி இருக்கு?" என்ற கேட்ட கேள்விக்கு "துப்பாக்கி கனமா தான் இருக்கும். அதை கரெக்ட்டா ஹேண்டில் பண்ணனும்" என பதிலளித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×