search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காது குத்திக் கொண்ட நயன்தாரா
    X

    'காதுமா'வாக மாறிய நயன்தாரா.. காது குத்திக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல்

    • நயன்தாரா தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    • காதில் ரத்தம் வரும்போது விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலை நயனதாரா பாடுகிறார்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்வது மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    அவ்வகையில் நயன்தாரா தற்போது தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், காது குத்தும் கடைக்குச் செல்லும் நயன், அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்கின்றார். அதன் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்கள், நயன்தாராவுக்கு அந்த தோடை குத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில், நயனுக்கு காதில் இருந்து ரத்தம் வருகின்றது. அப்போது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடுகிறார்

    இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    Next Story
    ×