search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முதல்வரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சிவகார்த்திகேயன்
    X

    மு.க.ஸ்டாலின் -சிவகார்த்திகேயன்

    முதல்வரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சிவகார்த்திகேயன்

    • திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
    • இதை பொதுமக்கள், மாணவர்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

    திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஏற்பாடு செய்யதிருந்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டுள்ளார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதை பார்க்கும் பொழுது தெரிந்தது ஒரு விஷயம் தான் எவ்வளவு பெரிய உயரத்தை நாம் அடைய வேண்டுமோ அதற்கு நிறைய வலிகளையும் தியாகங்களையும் தாண்டி தான் வரவேண்டும் என்பது இதை பார்க்கும் பொழுது தெரிந்தது என்று கூறினார்.

    Next Story
    ×