என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் நடிகர் விஜய்
- நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் இன்று மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க இருக்கிறார்.
நடிகர் விஜய் சென்னையில் இன்று ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது.
விஜய்
இதன் அடிப்படையில் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக தங்கள் மன்ற நிர்வாகிகளை மக்கள் பணிகளில் ஈடுபட வைக்க பல்வேறு திட்ட வடிவங்கள் நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பின்பற்றி பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
விஜய்
இந்த நிலையில் இன்று விஜய் மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க இருக்கிறார். இந்த முறை அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப்பேச இருக்கிறார். இதற்காகக் காலையிலிருந்தே பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமையகத்தில் ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். அனைவருக்கும் மதிய உணவாகச் சூடான பிரியாணி சமைக்க அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம்போல் பிற்பகலில் விஜய் நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார். கடந்த முறை பனையூர் பிரியாணி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்