search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோவையை நோக்கி படையெடுக்கும் சோழர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
    X

    பொன்னியின் செல்வன்

    கோவையை நோக்கி படையெடுக்கும் சோழர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் ஆந்தம் பாடல் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2 படக்குழு

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இன்று முதல் இந்தப் படத்தின் புரொமோஷன் தொடங்குகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன் -2 படக்குழு

    இதைத்தொடர்ந்து, இப்படத்தின் ஆந்தம் பாடலை நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். இந்நிலையில், புரொமோஷன் நிகழ்ச்சிக்காக 'பொன்னியின் செல்வன் -2' படக்குழு தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்றுள்ளனர். இதனை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'கோயம்புத்தூர்!! இதோ வர்ரோங்கண்ணா!!' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


    Next Story
    ×