என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணிய சுவாமி
Byமாலை மலர்25 March 2019 9:18 AM GMT (Updated: 25 March 2019 10:14 AM GMT)
ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசிய பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி, ரஜினி அரசியலுக்கு வரமாட்டார், ஒருவேளை வந்தால் உடனடியாக ஜெயிலுக்கு போவார் என்றார். #Rajinikanth #SubramanianSwamy
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி அளித்த பிரத்யேக பேட்டியில் பேசும் போது,
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். 5 வருட ஆட்சிக் காலத்தில் பொருளாதார அளவில் பாரதிய ஜனதா அரசு தோல்வியையே சந்தித்துள்ளது. எனினும் பாரதிய ஜனதாவுக்கே செல்வாக்கு உள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை பாரதிய ஜனதா தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் காலூன்ற முடியும். கூட்டணி வைத்தால் இயலாது.
அரசியலும், சினிமாவும் ஒன்றில்லை. ரஜினி வர்றார், வர்றார்னு சொல்றாங்க, அவர் எங்கே வர்றார். அடுத்த தேர்தல் வரும் போது, இந்த தேர்தலில் போட்டியில்லை அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன்னு சொல்வார். இது அவருக்கு பழக்கமாகிவிட்டது.
அப்போது என்ன சொன்னார் என்று எனக்கு தெரியும். வந்துவிட்டார், வர்றார், பொதுக்கூட்டம் நடத்துகிறார், அமைப்பு ஆரம்பிக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர் வரமாட்டார் என்று நான் அப்போவே சொன்னேன், அதற்கான காரணம் எனக்கு தெரியும். ரஜினி எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டார். வரமுடியாது. ஒருவேளை வந்தார்னா அவர் உடனடியாக ஜெயிலுக்கு போவார்.
இவ்வாறு கூறினார். #Rajinikanth #SubramanianSwamy
சுப்ரமணிய சுவாமியின் பேட்டி:
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X