search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.
    • சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.

    தெப்ப திருவிழாவின்போது இரவு இந்திர விமான பல்லக்கில் உற்சவமூர்த்தியை புறப்பாடு செய்து,

    ராஜவீதி, ஒக்கிலியர் வீதி, ஐந்து முக்கு, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, சலீவன் வீதி வழியாக,

    அருள்மிகு வேணுகோபால் சுவாமி திருக்கோவிலை அடைந்து அதிகாலை 4 மணியளவில்,

    அங்குள்ள தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடத்துவர்.

    போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.

    சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.

    தெப்பம் ஆடியபின்னர் தேர்நிலை திடலில் வாணவேடிக்கை நடைபெறும்.

    அதன்பின்பு கோவிலில் சிறப்பு அபிஷேகமும் தரிசனமும் நிகழ்வுறும்.

    மாலையில் கொடியிறக்கம் நடைபெறும். 

    • இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.
    • மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.

    நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும்,வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவிலொன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான்.

    இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.

    மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள்.

    அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறுகோவிலொன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர்.

    அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.

    • கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.
    • இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.

    இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

    பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் சீரமைத்தார்.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

    மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

    • மாசியில் 14 நாள் திருவிழா தமிழ்மாதப்பிறப்பு பவுர்ணமி ஆடி வெள்ளி.
    • தை வெள்ளி நவராத்திரி திருக் கார்த்திகை தனுர்மாத பூஜை .

    மாசியில் 14 நாள் திருவிழா தமிழ்மாதப்பிறப்பு பவுர்ணமி ஆடி வெள்ளி.

    தை வெள்ளி நவராத்திரி திருக் கார்த்திகை தனுர்மாத பூஜை .

    தைப்பொங்கல் தீபாவளி.

    ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

    தேர் திருவிழாக்கள் :

    1. பூச்சட்டு

    2. அக்னிசட்டு

    3. திருவிளக்கு பூஜை

    4. மகிழ்வுந்து திருவிழா

    5. தீப உற்சவம்

    6. வசந்த விழா

    • 2008 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் நுழைவாயிலில் 833/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது.

    2008 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் நுழைவாயிலில் 833/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.

    பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது.

    பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன.

    திருக்கோவில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய இராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.

    பூஜை நேரம்

    1. காலசந்தி காலை 7.00 மணி

    2. உச்சிகாலம் நண்பகல் 12.00 மணி

    3. சாயரட்சை இரவு 7.00 மணி

    4. அர்த்த ஜாமம் இரவு 8.30 மணி

    • கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.
    • இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.

    இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

    பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் 'மகிசாசுர மர்த்தினி' அமைப்பில் சீரமைத்தார்.

    இக்கோவில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.

    • அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.
    • ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

    அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

    ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

    அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர்.

    பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

    இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

    கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோவிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர்.

    கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.

    • கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
    • இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

    கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

    ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர்.

    அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான்.

    அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர்.

    அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

    இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள்.

    அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார்.

    அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார்.

    அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண்மேட்டையும் கட்டி காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார்.

    இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

    • திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்
    • மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்

    பிறப்பு- கி.பி. 1017 பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள்

    பிறந்த ஊர் - பூதபுரி எனும் ஸ்ரீபெரும்புதூர்

    தந்தையார் - ஆசாரி கேசவ சோமயாஜி பட்டாசாரி

    தாய் - காந்திமதி எனும் பூமிப் பிராட்டியார்

    காதுகுத்தல் வைபவம் - கி.பி.1022

    உபநயனம் - கி.பி.1025

    திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்

    மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்

    காஞ்சீபுரத்தில் தனிக்குடித்தனம் - கி.பி.1034

    காசி யாத்திரை - 1035

    ஸ்ரீ ஆளவந்தார் சந்திப்பு - கி.பி. 1041

    ராமானுஜர் சந்தியாசம் - 1047

    திருக்கோட்டியூர் நம்பி சந்திப்பு - 1049

    திருமலை திருப்பதி வாசம் - 1051

    ஸ்ரீபாஷ்யம் எனும் வேதநூல் எழுதியது - கி.பி. 1051-1055

    திருமலைதிருப்பதி திருப்பணிகள் - கி.பி. 1057

    ஸ்ரீரங்கநாத சாம்ராஜ்ய நிர்வாக பொறுப்பு - 1058- 1089

    திக்விஜயம் - கி.பி. 1089- 1095

    கூர்மஷேத்திர திருப்பணி - கி.பி. 1094 - 1095

    மைசூர் தேசம் சென்றது - கி.பி.1097 - 1098

    தொண்டனூர் ராஜகுருவாக பிரகடனம் - கி.பி. 1110

    டில்லி சுல்தான் குமாரியிடம் விக்ரகம் பெற்ற சம்பவம் 1101-1104

    ஸ்ரீரங்கம் திரும்புதல் - கி.பி. 1111- 1112

    ஸ்ரீ ராமானுஜர் மோட்ச கதி அடைதல் - 22.1.1138

    • அவதரிதது 120 ஆண்டுகள் கழித்து, அவர் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் அத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • உடையவர் கந்த அந்த மூர்த்தத்தை ‘தாம் உகந்த திருமேனி’ என்றனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்த பக்தர்கள் வேதம் வகுத்த நெறியில் தம்முடைய விக்கிரகம் ஒன்றைச் செய்து பிரதிஷ்டை செய்ததைத் தான் மவுன நிலையில் கண்டதாகக் கூறினார்.

    எவருக்கும் தங்களுடைய வாழ்நாளில் தங்கள் பிறந்த மண்ணில் சிறப்புகள் கிட்டுவது அரிது.

    ராமானுஜருக்கு அச்சிறப்பு கிட்டியது. தமது வாழ்நாளுக்கு பிறகும் தம்முடைய அவதாரத் தலத்தில் அர்ச்சா வடிவத்தில் எழுந்தருளுவது ராமானுஜருக்கு உகப்பாகவே இருந்தது.

    அவதரிதது 120 ஆண்டுகள் கழித்து, அவர் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் அத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    உடையவர் கந்த அந்த மூர்த்தத்தை 'தாம் உகந்த திருமேனி' என்றனர்.

    • அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன.
    • கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.

    ராமானுஜர் திருநாராயணபுரம் செல்வதற்கு முன்னால் 30 ஆண்டுகளும், அங்கிருந்து திரும்பி வந்த பிறகு 20 ஆண்டுகளும் ஆக மொத்தம் 50 ஆண்டுகள் திருவரங்கன் திருத்தொண்டுகள் புரிந்தார்.

    அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவு வைணவத் திருத்தல்களில் பின்பற்றப்படுகின்றன.

    கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.

    திருவீதிகளில் வேதங்கள் மற்றும் பிரபந்தங்களை ஓதச் செய்தார். அவற்றைக் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.

    சோழச் சிற்றரசன் அகளங்கனிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்து, அது வெவ்வனே செயற்பட வழிவகுத்தார்.

    அரங்கனுக்குரிய நிவேதனங்கள் குறைவின்றித் தளிகை செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் தாராளமாக வழங்கப்பட்டன.

    திருக்கோவிலைச் சுற்றி மண்டபங்கள், நந்தவனங்கள், மலர்ச்சோலைகள், மருத்துவமனைகள், நூல் நிலையங்கள் போன்ற அனைத்தும் நிறுவப்பட்டன.

    மொத்தத்தில் திருக்கோவில் அமைதி அளிக்கும் வழிபாட்டுத் தலமாகவும், கலைகளை வளர்க்கும் இடமாகவும், மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அறச்சாலையாகவும் விளங்கின.

    குறிப்பாக, திருக்கோவிலில் சமத்துவ பக்தி நிலவச் செய்ததில் ராமானுஜர் முன்னோடியாக திகழ்ந்தார்.

    தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று அனைவரும் போற்றும் அளவிற்கு திருவரங்கத்தைச் செழிக்கச் செய்தார் உடையவராகிய ராமானுஜர்.

    நூற்றிருபது வயது முதுமையிலும் ராமானுஜர் சீடர்களுக்குப் பாடம் கற்பித்து வந்தார்.

    ஒருநாள் பாடம் சொல்லி வந்தபோது, ராமானுஜர் மவுனத்தில் ஆழ்ந்தார்.

    அப்போது அவருடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டு ரத்தம் வந்தது. சீடர்கள் செய்வது அறியாது திகைத்தார்.

    சிறிது நேரம் கழித்து மவுனம் கலைந்து, உடையவரே மவுனத்தில் உதிரம் சொட்டிய காரணத்தை விளக்கினார்.

    சீர்திருத்தம் பலவற்றை சிறப்புடனே செய்தவராம்...

    சீர்பெருமை பல பெற்ற சீர்மிகு ராமானுஜராம்...

    (சீர்திருத்தம்)

    வைணவராய்ப் பிறந்தாலும் வையகமே போற்றி நிற்கும்

    வரதராஜன் தந்த வரம் ராமானுஜர் அவதாரம்!

    குலத்தாழ்ச்சி இல்லாமல், குலப்பெருமை பேசாமல்,

    குலகுருவாய் வந்திட்டவர், குலம் செழிக்க வாதிட்டவர்!

    (சீர்திருத்தம்)

    ஆழ்வார்கள் அருளிச் செய்த அழகு தமிழ்ப் பாசுரங்கள்

    வடமொழியின் வேதத்திற்கு இணையெனவே வாதிட்டவர்!

    திராவிடரின் வேதமென்றே திவ்ய பிரபந்தப் பாசுரத்தை

    ஓதும்படி செய்திடவே இவ்வுலகில் தோன்றிட்டவர்!

    (சீர்திருத்தம்)

    திருக்கோவில் உள்ளேதான் நுழைந்திடவே முடியாத

    தெருக்கோடி மக்களுக்கும் திருக்கரத்தை நீட்டியவர்!

    தீண்டாமை எனச் சொல்லும் தீவினையை மாற்றிடவே

    திருப்பெரும்புதூர் ஈன்றெடுத்த அவதார திருச்செல்வர்!

    (சீர்திருத்தம்)!

    -நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா

    ×