search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சாயியை அடைய ஆரத்தி சாய் பாபா பாடலை பாடுங்கள்!
    X

    சாயியை அடைய "ஆரத்தி சாய் பாபா" பாடலை பாடுங்கள்!

    • மாதவா அக்கர் பாபாவிடம் இந்தப் பாடலை காட்டியவுடன் ”இந்த பாடலை ஆரத்தியில் பாடுங்கள்! இந்த பாடல் நன்றாக இருக்கிறது.
    • இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று ஆசீர்வதித்தார்.

    சீரடி சாய் பாபாவுக்கு முதன் முதல் எழுதப்பட்ட ஆரத்திப் பாடல் "ஆரத்தி சாய் பாபா".

    இந்த பாடல் மத்திய வேளையில் தூப ஆரத்தியில் உள்ளது.

    இந்த பாடலுடன் தான் தூப ஆரத்தி ஆரம்பமாகும். இந்தப் பாடலை எழுதியவர் மாதாவா அக்கர்.

    காலம் செப்டம்பர் 1904 (இந்தப் பாடலை தாசகணுவிற்கு காட்டினார்).

    அவர் "இந்த பாடலை நம் பாபா பார்த்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்னார்.

    மாதவா அக்கர் பாபாவிடம் இந்தப் பாடலை காட்டியவுடன் "இந்த பாடலை ஆரத்தியில் பாடுங்கள்! இந்த பாடல் நன்றாக இருக்கிறது.

    இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று ஆசீர்வதித்தார்.

    பாபாவின் அவதாரம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி அவர் மற்றுமொரு ஜென்மம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதற்காகத் தான் நான்கு வேளைகளிலும் சமாதி மந்திரியில் ஆரத்தி நடந்து கொண்டிருக்கிறது.

    சமாதியில் இருந்து கொண்டே நான் எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருப்பேன் என்று பாபாவே 11 கட்டளைகளில் கூறியதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.

    Next Story
    ×