search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவராத்திரி  ஏழாம் நாள் வழிபாடு!
    X

    நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு!

    • பூ மற்றும் மண் கொண்டு திட்டாணி கோலம் போட்டு, தும்பை பூவால் அர்ச்சனை செய்து, தாழம்பூவால் அலங்கரிக்க வேண்டும்.
    • நைவேத்தியமாக எலுமிச்சை சாதம் வைத்து வணங்க வேண்டும். பிலஹரி ராகத்தில் பாடி அம்மனை ஆராதிக்க வேண்டும்.

    இன்று அம்மன் ஷாம்பவி அல்லது ஷம்புபத்தினி அல்லது சரஸ்வதி என்ற ரூபத்தில் அருள்புரிகிறாள்.

    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.

    பூ மற்றும் மண் கொண்டு திட்டாணி கோலம் போட்டு, தும்பை பூவால் அர்ச்சனை செய்து, தாழம்பூவால் அலங்கரிக்க வேண்டும்.

    நைவேத்தியமாக எலுமிச்சை சாதம் வைத்து வணங்க வேண்டும். பிலஹரி ராகத்தில் பாடி அம்மனை ஆராதிக்க வேண்டும்.

    இந்த முறையில் அம்மனை வணங்கினால் கலைகளில் தேர்ச்சி உருவாகும். பதவி உயர்வு வரும். தேக அழகு கூடும்.

    அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் எல்லாம் விலகி நல்ல எண்ணங்கள் உருவாகும்.

    தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னை.

    ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டு சாதம்.

    Next Story
    ×