search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பாண்டுரங்க சாமியாக காட்சியளித்த சாயி
    X

    பாண்டுரங்க சாமியாக காட்சியளித்த சாயி

    • அங்கே அவர் கண்களுக்கு, சாயிபாபாவே பாண்டு ரங்க சாமியாக காட்சி அளித்தார்.
    • கண்ணீர் மலர்களால் பூஜை செய்து திகைத்தார் தாசகணு.

    சாயி பக்தர்களில் ஒருவர் தாசகணுவர் என்பவர்.

    அவருக்கு ஒரு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, சாயிபாபாவிடம் சென்று கனிகளையும் காணிக்கைகளையும் சமர்ப்பணம் செய்துவிட்டு "நான் பண்டரிபுரம் செல்ல அனுமதி வேண்டும்" என்று கேட்டார்.

    சாயிபாபா "சீரடிதான் பண்டரிபுரமாக இருக்கிறது.

    இது புரியவில்லையா? உனக்கு எதற்காக அவ்வளவு தூரம், நேரம் காலம், பணம், ஆரோக்கியம், சிரமம்? இவற்றை எல்லாம் செலவு செய்து போகத்தான் வேண்டுமா? என்று கேட்டார்.

    ஒப்புக்கொள்கிறேன்.

    சீரடியே பண்டரிபுரமாக இருக்கட்டும். ஆகால் பாண்டுரங்கன் யார்? என்று புரிய வில்லையே...? என்ற சந்தேகக் கேள்வியுடன் தம் தேகத்தைக் கீழே கடத்தி சாஷ்டாங்கமாக நோக்கினார்.

    அங்கே அவர் கண்களுக்கு, சாயிபாபாவே பாண்டு ரங்க சாமியாக காட்சி அளித்தார். கண்ணீர் மலர்களால் பூஜை செய்து திகைத்தார் தாசகணு.

    Next Story
    ×