search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பஞ்சாச்சார்ய பதாச்ரயர்
    X

    'பஞ்சாச்சார்ய பதாச்ரயர்'

    • பெரிய திருமலை நம்பிகளிடம் ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.
    • இதனால் பகவத் ராமானுசர் 'பஞ்சாச்சார்ய பதாச்ரயர்' என்ற திருநாமமும் பெற்றார்.

    1. பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றார்.

    2. திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரகஸ்யத்திரய ஆழ்பொருள்களைப்பெற்றார்.

    3. திருமாலையாண்டானிடம் திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.

    4. திருவரங்கப்பெருமாளரையரிடம் ஆசார்ய நிஷ்டை எனும் சரமோபாய நிஷ்டையின் ஆழ்பொருள்களையும், தர்ம ரகஸ்யங்களையும் பெற்றார்.

    5. பெரிய திருமலை நம்பிகளிடம் ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.

    இதனால் பகவத் ராமானுசர் 'பஞ்சாச்சார்ய பதாச்ரயர்' என்ற திருநாமமும் பெற்றார்.

    எம்பெருமானார், எம்பார், முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோர் ஆதிசேஷன், கருடன், சங்கு, சக்ராதிகளின் அவதாரங்கள் என்பதை அனைவரும் உணரலானார்கள்.

    Next Story
    ×