search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராமானுஜர் குறிப்புகள்
    X

    ராமானுஜர் குறிப்புகள்

    • கவிஞர் வாலி “ராமானுஜய காவியம்” எழுதியுள்ளார். வானதி பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது.
    • ராமானுஜர் பெயரில் திருப்பதியில் ஒரு புஷ்கரிணியை அவரது சீடர் அனந்தாழ்வார் ஏற்படுத்தினார்.

    * ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று காஞ்சீபுரம் சாலைக்கிணறில் உள்ள ராமானுஜர் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தால் கால சர்ப்ப தோஷம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.

    * ராமானுஜரின் புரட்சிகரமான சீர்திருத்தங்களை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய ராமானுஜர் பற்றிய வரலாறு தொடராக தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. வைணவ வேத விற்பன்னர்களிடம் அந்த தொடர் மிகுந்த ஆதரவைப் பெற்றது. அவர்கள் கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    * கவிஞர் வாலி "ராமானுஜய காவியம்" எழுதியுள்ளார். வானதி பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது.

    * ராமானுஜர் பெயரில் திருப்பதியில் ஒரு புஷ்கரிணியை அவரது சீடர் அனந்தாழ்வார் ஏற்படுத்தினார். இப்போதும் அந்த புஷ்கரிணி பயன்பாட்டில் உள்ளது.

    * ராமானுஜர் அவதரித்ததால் ஸ்ரீபெரும்புதுரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் ஆலயம் நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இத்தலத்தில் சொர்க்க வாசல் என்று எதுவும் இல்லை.

    * ராமானுஜரின் நீண்ட ஆயுட்காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் அமைந்தார்கள். அவர்களில் பலர் அவருடைய விக்கிரகங்களை உருவாக்கி பல்வேறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    Next Story
    ×