search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மும்மூர்த்திகளின் பணிகளை குறிக்கும் விநாயகர் கை உணர்த்தும் தத்துவம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மும்மூர்த்திகளின் பணிகளை குறிக்கும் விநாயகர் கை உணர்த்தும் தத்துவம்

    • மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார்.
    • தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள்.

    ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.

    ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

    மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது.

    எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    பிள்ளையார் சுழி

    உலகத்தில் முதன் முதலாக எழுத்தைக் கண்டு பிடித்து எழுதத் தொடங்கியவர் விநாயகர் தான் என்பது புராணம் கூறுவது.

    மகாபாரதத்தை வியாசர் எடுத்துரைத்த போது அதை அழியாமல் காக்கும் பொருட்டு விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே எழுத்தாணியாக்கி எழுதினார்.

    எழுத்தைக் கண்டு பிடித்த கணபதிக்கு நம் நன்றியைச் சொல்லும் விதமாக எதை எழுதத் தொடங்கினாலும் (உ) பிள்ளையார் சுழியைப் போடுகிறோம்.

    அதன்படி இவர் முழு முதற்கடவுள் என்கிறோம். முதல் எழுத்தாளரும் விநாயகர் பெருமானே.

    Next Story
    ×