என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி 5-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்8 Feb 2017 10:04 AM IST (Updated: 8 Feb 2017 10:04 AM IST)
கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி 5-ந்தேதி நடக்கிறது.
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயம் விளங்கி வருகிறது.
இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.
வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) 8-ம் நாள் திருவிழா அன்று புனித நற்கருணை நாதர் பவனி நடக்கிறது. பங்குத்தந்தை விக்டர் மறையுரை வழங்குகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித செபஸ்தியார் தேர் பவனி வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சிறப்பு மாலை ஆராதனையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட பிஷப் வின்சென்ட் மார்பவுலோஸ் கலந்துகொண்டு மறையுரை வழங்குகிறார். நள்ளிரவில் தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
10-ம் நாள் திருவிழா அன்று நடைபெறும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி மறையுரை வழங்குகிறார். திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை எஸ்.மணி அந்தோணி, தர்மகர்த்தா எஸ்.லியோ, கணக்கர் எஸ்.மரியசிலுவை மற்றும் எஸ்.மகான் அந்தோணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.
வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) 8-ம் நாள் திருவிழா அன்று புனித நற்கருணை நாதர் பவனி நடக்கிறது. பங்குத்தந்தை விக்டர் மறையுரை வழங்குகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித செபஸ்தியார் தேர் பவனி வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சிறப்பு மாலை ஆராதனையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட பிஷப் வின்சென்ட் மார்பவுலோஸ் கலந்துகொண்டு மறையுரை வழங்குகிறார். நள்ளிரவில் தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
10-ம் நாள் திருவிழா அன்று நடைபெறும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி மறையுரை வழங்குகிறார். திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை எஸ்.மணி அந்தோணி, தர்மகர்த்தா எஸ்.லியோ, கணக்கர் எஸ்.மரியசிலுவை மற்றும் எஸ்.மகான் அந்தோணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X