என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்11 May 2017 9:53 AM IST (Updated: 11 May 2017 9:53 AM IST)
வழுக்கம்பாறையை அடுத்த சகாயபுரத்தில் உள்ள இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
வழுக்கம்பாறையை அடுத்த சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 2-வது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி, இரவு 8 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் செபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை டயனீஷியஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், திருவிருந்தும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலியும் கொடியிறக்கமும், நதியோர நாணல் நாடகம் ஆகியவை நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத்தந்தையுமான ஜார்ஜ் வின்சென்ட், இணைப்பணியாளர் ஜோசப் செயில் சிங் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி, இரவு 8 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் செபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை டயனீஷியஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், திருவிருந்தும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலியும் கொடியிறக்கமும், நதியோர நாணல் நாடகம் ஆகியவை நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத்தந்தையுமான ஜார்ஜ் வின்சென்ட், இணைப்பணியாளர் ஜோசப் செயில் சிங் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X