என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வார்த்தையும், வாழ்வும் வலிமையானவை
Byமாலை மலர்24 May 2018 3:26 AM GMT (Updated: 24 May 2018 3:26 AM GMT)
இயேசுவின் வார்த்தைகளில் ஊன்றி அவருக்குரிய செயல்களை செய்து வாழ்வதே வலிமை. அத்தகைய உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழ முற்படுவோம். இயேசுவின் சாட்சிகளாவோம்.
இயேசுவை பற்றி அறிந்து கொள்ள அவருக்கு சாட்சிகளாய் இருப்பது இரண்டு ஆகும். ஒன்று இயேசு சொல்லும் உயிருள்ள இறைவார்த்தைகள். மற்றொன்று இயேசு செய்து காட்டும் வாழ்வு தரும் செயல்கள். இந்த இரண்டும் இயேசு யாராயிருகின்றார் என்று நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இவற்றின் மூலம் இயேசுவை அறிந்து அவரை நம்பி வாழ நாம் அழைக்கப்பட்டிருகின்றோம்.
அந்த வகையில் இயேசுவை பின் தொடர்ந்தவர்கள் இரண்டு பிரிவினர். இயேசுவை தவறாக புரிந்து கொண்டு அவரை விமர்சனப்படுத்தும் பரிசேயர்கள் ஒரு புறம். அவரது வார்த்தைகளை கேட்டும், செயல்களை கண்டும் அவர்மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் மற்றொருபுறம். முதல்வகையினர் வானியியல் படி வாழ்ந்தவர்கள். எப்பொழுதும் உலகு சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள். உலகிற்குரிய காரியங்கள் குறித்து அதிக அக்கறை கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையை மேலோட்டமாக அணுகி, பாவக்கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்கள்.
இதனால் ஆண்டவரிடமிருந்து அன்னியபட்டு நிற்பவர்கள். ஆனால் இன்னொரு வகையினரோ ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தவர்கள். இவர்கள் உலகுச்சார்ந்த வாழ்க்கையினை கடந்து உள்ளுக்குள் பயணிப்பவர்கள். பாவம், இவர்கள் மேல் ஆட்சி செய்ய விடாதவர்கள். தந்தையாகிய இறைவனை இயேசுவின் சொல்லிலும், செயல்களிலும் கண்டுகொண்டவர்கள். நாம் வாழ்வது ஆவிக்குரிய வாழ்வா? உலகம் சார்ந்த வாழ்வா?
இத்தவக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகளில் ஊன்றி அவருக்குரிய செயல்களை செய்து வாழ்வதே வலிமை. அதுவே நம் கடமை. சிறந்த தவம். அத்தகைய உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழ முற்படுவோம். இயேசுவின் சாட்சிகளாவோம்.
- ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய குருமடம், குடந்தை.
அந்த வகையில் இயேசுவை பின் தொடர்ந்தவர்கள் இரண்டு பிரிவினர். இயேசுவை தவறாக புரிந்து கொண்டு அவரை விமர்சனப்படுத்தும் பரிசேயர்கள் ஒரு புறம். அவரது வார்த்தைகளை கேட்டும், செயல்களை கண்டும் அவர்மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் மற்றொருபுறம். முதல்வகையினர் வானியியல் படி வாழ்ந்தவர்கள். எப்பொழுதும் உலகு சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள். உலகிற்குரிய காரியங்கள் குறித்து அதிக அக்கறை கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையை மேலோட்டமாக அணுகி, பாவக்கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்கள்.
இதனால் ஆண்டவரிடமிருந்து அன்னியபட்டு நிற்பவர்கள். ஆனால் இன்னொரு வகையினரோ ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தவர்கள். இவர்கள் உலகுச்சார்ந்த வாழ்க்கையினை கடந்து உள்ளுக்குள் பயணிப்பவர்கள். பாவம், இவர்கள் மேல் ஆட்சி செய்ய விடாதவர்கள். தந்தையாகிய இறைவனை இயேசுவின் சொல்லிலும், செயல்களிலும் கண்டுகொண்டவர்கள். நாம் வாழ்வது ஆவிக்குரிய வாழ்வா? உலகம் சார்ந்த வாழ்வா?
இத்தவக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகளில் ஊன்றி அவருக்குரிய செயல்களை செய்து வாழ்வதே வலிமை. அதுவே நம் கடமை. சிறந்த தவம். அத்தகைய உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழ முற்படுவோம். இயேசுவின் சாட்சிகளாவோம்.
- ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய குருமடம், குடந்தை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X