search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரகம் என்றால் என்ன?
    X

    நரகம் என்றால் என்ன?

    அநேக கிறிஸ்தவர்களுக்கு நரகம் என்றால் என்ன? என்று தெரியும். இயேசு அநேக இடங்களில் நரகத்தைப்பற்றி வேதாகமத்தில் எச்சரித்தும் இருக்கிறார்.
    மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:18). அநேக கிறிஸ்தவர்களுக்கு நரகம் என்றால் என்ன? என்று தெரியும். இயேசு அநேக இடங்களில் நரகத்தைப்பற்றி வேதாகமத்தில் எச்சரித்தும் இருக்கிறார். நரகம் மனிதர்களுக்கு உருவாக்கப்பட்டது அல்ல.

    அது சாத்தானுக்காகவும் அவனுடைய சகாக்களுக்காகவும் கடவுளை எதிர்த்ததினால் உருவாக்கப்பட்டது. எப்பொழுது மனிதன் கடவுளுக்கு கீழ்படியாமல் போனானோ அன்றிலிருந்துதான் மனிதனுக்கும் அதில் பங்கு ஏற்பட்டுவிட்டது. இயேசு நரகத்தை அழியாத அக்கினி என்று குறிப்பிடுகிறார். அது கேடு (மத்தேயு 7:13) புறம்பான இருள் (25:30) அக்கினி சூளை (13:50). இயேசு பாதாளத்தின் வாசல்களை தன் சீடர்களுக்கு சொல்லுகையில் நரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிலும் இரு கைகளும், கண்களும் இல்லாமல் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் என்கிறார்.

    இயேசு தன் சீடர்களுக்கு பணக்காரன் மரித்த பின் நரகம் செல்வதையும் மற்றும் ஏழை லாசுரு ஆபிரகாமின் மடியில் சொர்க்கத்தில் சேருவதின் கதை மூலமாக விவரிக்கிறார். (லூக்கா 16:19-31). இயேசு நம் எல்லோருக்காகவும் பாவமானார், சாபமானார். நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் . ஆனால் இயேசு என்னை நரகத்திற்கு போகாமல் தடுக்க முடியுமா? முடியும்!

    ஆனால் என்னுடைய பாவத்திற்கான ஈடுபொருளை அவரிடம் மன்றாடி கேட்கும் பொழுது அதைப்பெற்றுக் கொள்வேன். நான் பாவி, என் பாவத்திற்காக நான் வருந்துகிறேன் என்று நான் அறிக்கையிட்டு, இயேசுவின் ரத்தத்தினால் என்னை மூடி என் பாவத்திற்காக அவர் ஈடுபொருளை செலுத்தாதவரை நான் விசுவாசி. பயப்படுகிறவர்களும், ஆவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலை பாதகரும், சூனியக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8). முடிவு நம் கையில் ஆமென்! 
    Next Story
    ×