என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தவக்கால சிந்தனை: பைபிள் காட்டும் நட்பு
Byமாலை மலர்28 March 2019 3:32 AM GMT (Updated: 28 March 2019 3:32 AM GMT)
மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும்.
“கேடு வருவிக்கும் நண்பர்களும் உண்டு; உடன் பிறந்தாரை விட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு (நீதி:18:24)”.
இரு நண்பர்கள், பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் விவாதம் ஒன்று முளைத்தது. பின்னர் அது சண்டையாக மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக அமைதியாக ஒதுங்கிப்போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்து விட்டான்” என்று மணலில் எழுதினான். அடி கொடுத்த நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் அமைதியாக நடை பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.
அப்போது ஒரு பாலைவன ஊற்றில் 2 பேரும் குளித்து கொண்டு இருந்தனர். கன்னத்தில் அறை வாங்கிய நண்பனின் காலை யாரோ பிடித்து இழுப்பது போன்ற உணர்வில் தடுமாறியவன், அடுத்த நொடி அது புதைகுழி என்பதை அறிந்து, தான் சிக்கிக் கொண்டதை நினைத்து அலற ஆரம்பித்தான். அடுத்த நொடி அறை விட்ட அந்த நண்பன் பெரும் முயற்சி எடுத்து அவனை காப்பாற்றி கரை சேர்த்தான்.
“நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கண்ணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான் (நீதி:17:17)”.
உயிர் பிழைத்த நண்பன் ஆபத்திலிருந்து மீண்டு வந்த உடன், இன்று எனது ஆரூயிர் நண்பன் என் உயிரை காப்பாற்றினான் என கல்லில் எழுதினான். இதை பார்த்து கொண்டிருந்தவனோ, நான் உன்னை கன்னத்தில் அறைந்தபோது அதை மணலில் தானே எழுதினாய். இப்போது காப்பாற்றியபோது அதை கல்லில் எழுதுகிறாயே? என்றான்.
அதற்கு அன்பான அந்த நண்பனின் இனிமையான பதில், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிட வேண்டும். மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும். வாழ்க்கை என்பது எளிதான பயணம் தான். மனிதர்கள் தான் அதனை பல நேரங்களில் சிக்கலாக்கி விடுகின்றார்கள்.
- கிளமென்ட்சியா, அம்மாப்பேட்டை.
இரு நண்பர்கள், பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் விவாதம் ஒன்று முளைத்தது. பின்னர் அது சண்டையாக மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக அமைதியாக ஒதுங்கிப்போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்து விட்டான்” என்று மணலில் எழுதினான். அடி கொடுத்த நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் அமைதியாக நடை பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.
அப்போது ஒரு பாலைவன ஊற்றில் 2 பேரும் குளித்து கொண்டு இருந்தனர். கன்னத்தில் அறை வாங்கிய நண்பனின் காலை யாரோ பிடித்து இழுப்பது போன்ற உணர்வில் தடுமாறியவன், அடுத்த நொடி அது புதைகுழி என்பதை அறிந்து, தான் சிக்கிக் கொண்டதை நினைத்து அலற ஆரம்பித்தான். அடுத்த நொடி அறை விட்ட அந்த நண்பன் பெரும் முயற்சி எடுத்து அவனை காப்பாற்றி கரை சேர்த்தான்.
“நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கண்ணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான் (நீதி:17:17)”.
உயிர் பிழைத்த நண்பன் ஆபத்திலிருந்து மீண்டு வந்த உடன், இன்று எனது ஆரூயிர் நண்பன் என் உயிரை காப்பாற்றினான் என கல்லில் எழுதினான். இதை பார்த்து கொண்டிருந்தவனோ, நான் உன்னை கன்னத்தில் அறைந்தபோது அதை மணலில் தானே எழுதினாய். இப்போது காப்பாற்றியபோது அதை கல்லில் எழுதுகிறாயே? என்றான்.
அதற்கு அன்பான அந்த நண்பனின் இனிமையான பதில், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிட வேண்டும். மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும். வாழ்க்கை என்பது எளிதான பயணம் தான். மனிதர்கள் தான் அதனை பல நேரங்களில் சிக்கலாக்கி விடுகின்றார்கள்.
- கிளமென்ட்சியா, அம்மாப்பேட்டை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X